20 அக்டோபர் 2025

அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!


    தொன்னூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமனியனுக்கு தீபாவளி என்பது சொர்க்கத்தை காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவது தான் மாவரைப்பதால் பண்டிகைகால பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்த பின்னாலும் கலையாத அரைகுறை தூக்கத்தோடு இலை முழுக்க பலங்காரங்களை பரப்பி இட்லி சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் நாவெங்கும் சுவையாக இருக்கிறது. விதவிதமாய் எதை சாப்பிட்டாலும் இப்போதெல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

    ட்ரவுசர் கலச்சாரம் முட்டிக்கு மேல் போய்விட்ட இன்றைய நாட்களில் கைலிகளெலாம் வாஷ்டு லுங்கிகளாகி விட்டன. அப்போது இப்படியில்லை; புதிதாய் வாங்கிய கைலியில் மொடமொடப்பு குறையவே ஓரிரு வாரங்களாகும். புது கைலியை மூட்டுவதற்கும் டைலரின் தேவையிருந்தது. ரெடிமேட் ஜவுளிகள் பரவலாக்கப்படாத அன்றைய காலங்களில், மீட்டர் கணக்கில் எடுத்து கொடுத்து, முதல்நாள் நள்ளிரவு வரை தையற்கடை வாசலில் தவமாய் காத்திருக்க வேண்டிருக்கும். கால் கடுக்க நின்றாலும், அடித்து விரட்டாத குறையாக டைலர் கடையை விட்டு போக சொல்லி பார்ப்பார்கள். ஒருவழியாய் பட்டன் கட்டி, அயர்னிங் செய்த பின்னால், கெஞ்சி கூத்தாடி அரைகுறையாய் அவசரகதியில் தைத்த புதிய சட்டையை வாங்கி முகர்ந்து பார்க்கும் போது வரும் வாடைக்கு இணையாக எந்த போதையுமில்லை. மஞ்சள் வைத்த காலரோரத்தை தூக்கி விட்டு ஊசி வெடி, லெட்சுமி வெடியென சரம் சரமாய் வெடித்தாலும், வெறும் மத்தாப்பு துளிகள் பட்டு ஓட்டை விழுந்த புதுச்சட்டைக்காக முதுகில் விழுந்த அடிகள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன. அந்த அடியை விட சட்டை ஓட்டையானது தான் பெரும்வலியாக இருக்கும். இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் எடுத்த பிராண்டட் புதுச்சட்டையை உடனே போட பெரிதாய் எவ்வித ஆர்வமும் மனதிற்கில்லை, கைலியும் பனியனுமே போதுமானதாக இருக்கிறது.

    வெடிக்கடையில் ஐநூறு ரூபாய்க்கு வெடி வாங்கினாலே பெரிய விசயமாக இருந்தது. அதை சரி பங்காக ஆளாளுக்கு பிரித்து, காய வைத்து ஒவ்வொரு வெடியாய் ஒரு வாரம் முழுக்க வெடித்ததெல்லாம் இன்னமும் பசுமையாய் இருக்கிறது. ஒரு வாரமாக போட்டி போட்டு வெடித்த குப்பைகளை கூட அம்மாவை கூட்டி அள்ளவிடாமல், தீபாவளிக்கு அடுத்த நாளெங்கும் தெருத்தெருவாய் ஊர்சுற்றி வலம் வரும் போது எவ்வளவு வெடித்தாள்கள் நம் வீட்டு வாசலில் சிதறிக்கிடக்கின்றன என்பதை ஒப்பீட்டு சக தோழமைகளுடன் பெருமைப்பீற்றிக் கொண்ட காலமது. இப்போதெல்லாம் நேரடியாக சிவகாசியிலிருந்து ஆன்லைனில் ஆயிரக்கணக்கில் ஆர்டர் போட்ட வெடியில் ஒரு திரியை கூட பற்றவைக்க துளி கூட விருப்பம் இருப்பதில்லை.

    தமிழ்ராக்கர்ஸ், மூவீஸ்டா இல்லாத அன்றைய தீபாவளி நாட்களில் புதிதாய் வந்திருக்கும் திரைப்படத்தை காண தியேட்டரெங்கும் அலைமோதும் கூட்டங்கள் பெருமளவில் இப்போதில்லை. இன்னும் சொல்வதென்றால் ஊரே கொண்டாடிய தியேட்டர்களும் இப்போதில்லை. மூவி ரிவியூவர்ஸ்களின் எண்ணிக்கை அளவுக்கு கூட சிறுநகரங்களில் தியேட்டர்கள் இல்லை.

 அப்போதெல்லாம் திருப்பூர் சென்னையென வெளியூர் வேலைக்கு சென்றவரெல்லாம் அடையாளந் தெரியாதளவுக்கு ஆளே கொஞ்சம் மாறியிருப்பதால் பண்டிகை நாட்களில் ஊரெங்கும் கண்ணில் தென்படும் பலரை சட்டென எனக்கு தெரியாமல் போனது வியப்பாகத்தான் இருந்தது. பல வருடங்களாக அந்த ஊர் பக்கமே செல்லாததால் என்னை யாருக்கும் இப்போது தெரியாதென்பதில் கொஞ்சம் கூட எனக்கு வியப்பேதுமில்லை. ஓடி விளையாடிய பால்ய நினைவுகள் முழுவதும் நிரம்பியிருந்த அந்த மண்சுவரிலான வீட்டையும் விற்ற பிறகு, எங்கள் வீடிருந்த இடத்தில் புதியதொரு மாடி வீடு இருந்தால் அதை பார்த்து பூரித்து போகவா முடியும்? எங்களெக்கென வீடு இருந்ததை நினைத்து, வீடு இழந்ததை நினைத்து, இப்படியாக பலவற்றை நினைத்து பூரித்து போகவா முடியும் என்பது வேறு கதை.

  அன்றைய நாட்கள் போல கடைசி நொடியில் பணம் புரட்டி தீபாவளி விடிந்தும், கெளரவத்திற்காக மச்சான் வீட்டில் வரிசை வைத்து கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகளை இன்று காண முடியவில்லை. ஜி பே, ஃபோன் பே என பேமண்ட் ஆப்ஸ்களே தபால்காரர்களாக மாறிவிட்ட பின்னால் மிச்ச சொச்சமிருந்த மனி ஆர்டர் அனுப்பும் பழக்கமும் மலையேறி போய்விட்டன.

   இன்னும் சொல்வதென்றால், அத்திப்பட்டி போல பல கிராமங்களே காணாமல் போய்விட்டன; மிச்சமிருப்பவைகளும் பழைய கொண்டாட்டங்களின்றி, சொந்த பந்த உறவுகளின்றி சிறு சிறு நகரங்களாக சிதறிக்கிடக்கின்றன; பகை தான் மிச்சமென வைத்திருக்கும் புது பணக்காரர்களாக உருவெடுத்த பல குடும்பங்களில் உறவாடவும் நேரமில்லை. ஹாலிடே ட்ரிப் என ஊர்சுற்றவும் நேரமில்லை. ஆக, தீபாவளி என்பதும் ஒரு விடுமுறை நாளே ஒழிய, பெரிதாய் கொண்டாட யாருக்கும் ஏதுமில்லை. ஏனெனில், அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!

- இரா.ச. இமலாதித்தன்

21 ஜூன் 2024

கள்ளக்குறிச்சியை பற்றி பேசி பலனில்லை!

       அதிமுக ஆட்சியில் போராளி வேடமிட்ட சூர்யா, ஜோதிகா, கோவன் என பலரும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் ஓடி ஒளிந்து விட்டனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்களெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் விழித்தெழ வாய்ப்புண்டு. திராவிட மாடல் என பீற்றிக்கொண்டு திரியும் இவர்களது லட்சணத்தை ஊரே காறி உமிழ்கிறது. உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ரேசன் பொருட்களுக்கு கூட கடும் தட்டுப்பாடு. மாணவர்களுக்கு கொடுக்கப்படும் லேப்டாப் முதற்கொண்டு இடை நிறுத்தம். ஆனால், கஞ்சா மட்டும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதுபோக, மாணவர்களின் பெற்றோர்களுக்காக கள்ளச்சாராயமும், டாஸ்மாக் சரக்கும் பாலாறும் தேனாறுமாய் ஊரெல்லாம் ஓடுகின்றன.


 மகளிருக்கான இலவச பேருந்துகளால் ஒட்டுமொத்த போக்குவரத்துத்துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது. கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து முனையம் சந்தி சிரிக்கும் வேளையிலும், கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. போதிய அளவிலான புதிய பேருந்துகளையும் வாங்கவில்லை. பழைய பேருந்துகளையும் சரியாக சீரமைக்கவில்லை. லாஜிக் படி பார்த்தால் ஊழியர்களும், பேருந்துகளுமே பற்றாக்குறை. ஆனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும், விடுமுறை தினத்திற்காக கூடுதல் பேருந்துகளை இயக்குகிறோம் என ஊடகங்கள் வாயிலாக தம்பட்டம் அடிக்கின்றனர். இருக்கின்ற பேருந்துகளின் டயர் தனியே ஓடுகிறது. படிக்கட்டுகள் தரையில் கிடக்கின்றன. சிறு தூறலுக்கே பேருந்துக்குள்ளே மொத்தமாய் மழை நீர் கசிய தொடங்குகின்றன.


    ஒருவேளை எல்லாம் சரியாக அமைந்து பேருந்து இயங்கினால் குடிமகன்கள் பஸ்ஸை வழிமறித்து 'எங்களால் தான் கவர்மெண்ட்டே இயங்குது. என்னை மீறி பஸ்ஸை எடுத்துடுவியா?' என்ற ரேஞ்சுக்கு சாலையின் நடுவில் நின்று அரசியல் விவாதம் செய்கின்றனர். இடைமறித்து பேருந்துக்கு வழிவிட நினைக்கும் போலிஸிடமும் 'நீ ஏன் விக்கிற? அதான் குடிக்கிறேன்!' என லெப்டில் டீல் செய்யும் குடிமகன்களின் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.


ஐ.பி.எல். போட்டிக்கெல்லாம் இலவச பஸ் டிக்கெட் கொடுக்க முன்வந்தவர்கள், பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸை கொடுக்க தவறும் நிர்வாகத்தை எவன் கேள்வி கேட்டாலும், சங்கியென முத்திரை குத்தி பாஜகவை வளர்த்து விடுகின்றனர். அச்சு/காட்சி ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சமூக ஊடகங்களில் இவர்களது லீலைகள் அம்பலப்பட்டு விடுகின்றன. அதற்காகவே நெட்டிசன்களை மடைமாற்றம் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக சோசியல் மீடியாவில் பலான வீடியோக்களை சமயத்திற்கேற்ப பரப்பி விடுகின்றனர். இம்மாதிரியான ஃபார்மலா எல்லா நேரமும் எடுபடாது என்பதை இவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதே இல்லை.


    காவல்துறையை தங்களது பவுன்சர்கள் போல பாவித்து எதிர்க்கேள்வி கேட்பவனையெல்லாம் கைது, மிரட்டல் செய்ய உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இப்படியான ஆணவத்தில் ஆடியதால் தான் பத்து வருடங்கள் அதிகாரத்திற்கு வர முடியாமல் போனது என்பதை மறந்து, திரும்ப தலைகால் தெரியாமல் பிணந்திண்ணி வவ்வால் போல் ஆட்சிக்கட்டிலில் தொங்கி கொண்டிருக்கின்றனர். காலம் அனைத்தையும் மாற்றும். இந்த அதிகார மமதையில் அனைவரையும் ஒடுக்கி, ஜால்ராக்களின் துதிகளை நம்பி கண்மூடி புகழ் போதையில் உழலும் இந்த திராவிட மாடல் ஃபெயிலர் என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.


- இமலாதித்தன்

13 செப்டம்பர் 2022

ஆண்ட பரம்பரையில் வந்த இங்கிலாந்த ராணி!






இந்திய மண்ணை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை எதிர்த்த நேதாஜிக்கு ஒரு பக்கம் சிலை திறக்கிறோம். மறுபக்கம் அந்த ஆங்கிலேய அரச வம்சத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி இறந்ததற்காக நாடு முழுதும் துக்கம் அனுசரித்து அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விடுறோம். இது இந்திய கொள்கை.

தமிழ்நாட்டிலோ, எல்லா சாதியிலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப்போரட்ட வீரர்களை, தேசபக்தி நாயகர்களை விழா எடுத்து கொண்டாடுகிறோம். ஆனால், அவர்களை சூழ்ச்சியால் வீழ்த்தி கொன்றொழித்த ஆங்கிலேய மன்னர் வம்சத்தை சேர்ந்த வயது முதிர்வால் இறந்து போன மூதாட்டிக்கும் இரங்கற்பா படிக்கின்றோம்.

இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?

தமிழ்நாட்டில் மன்னர் பரம்பரை, ஆண்ட பரம்பரை என சொல்பவர்களை கடுமையாக எதிர்க்கும் எல்லா குரூப்களும் இங்கிலாந்து ராணிக்கு ராஜவிசுவாசம் காட்டுகின்றனர். 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் மட்டுமில்லாது அவர்களது குடிவழி உறவினர்கள் என திருப்பத்தூரில் 500க்கும் மேற்பட்ட தமிழர்களை, தேச பக்தர்களை, மண்ணின் மைந்தர்களை கொன்றொழித்தன் பின்னணியில் இந்த இங்கிலாந்து ராணியின் குடும்பமும் உண்டென என்பது கூடவா தெரியாது? இதையெல்லாம் கேட்டால், முரட்டு முட்டு தான் கொடுக்கிறார்கள். ஒருபோதும் நம் வரலாற்றை மறக்காதீர்கள். அது கடந்த காலத்தை மட்டும் நினைவு படுத்தவில்லை. எதிர்காலத்தை எச்சரிக்கை செய்யும் வல்லமையும் அதற்குண்டு.

- இரா.ச. இமலாதித்தன்


பிற்சேர்க்கை:

இந்த சாதி ஒளிப்பு போராளிகள், தலித்திய போராளிகள், பகுத்தறிவு போராளிகள், ஆண்டப்பரம்பரை எதிர்ப்பு போராளிகள், ஆணவக்கொலை என பெயர்மாற்றம் செய்த போராளிகள், கருஞ்சட்டை, நீலச்சட்டை, பச்சை சட்டை, சிவப்புசட்டை என வண்ணப்போராளிகளெல்லாம் சேர்ந்து, இந்தியா உள்பட நூற்றுகணக்கான நாடுகளை அடிமைப்படுத்திய அந்த மன்னர் பரம்பரையை சேர்ந்த ராணிக்கு விதவிதமா இரங்கல் பா படிச்சாட்டாங்க. இந்நேரம் அந்த மகாராணியின் ஆன்மா சாந்தி அடைஞ்சிருக்கணும்.

12 செப்டம்பர் 2022

நாய்கள் ஜாக்கிரதை!


நாகரீக நாய் வளர்ப்பு கதை!

கொஞ்சம் காசு பணம் வந்துட்டா பொட்டி மாதிரி வீடு கட்டி, லோன்ல காரை வாங்கி நிப்பாட்டுறதோட மட்டுமில்லாம பெருமைக்கு நாயை வேற வளர்க்க ஆரம்பிச்சிடுறாங்க. எல்லா சூழலையும் தாங்கிக்கிற நம்ம நாட்டு நாயை விரட்டி விட்டுட்டு, எங்கேயோ ஆயிர கணக்குல பணங்கொடுத்து நாய்ங்கிற பேர்ல ஒன்னை வாங்கி வாசல்ல கட்டி போட்டுறாங்க. அது பூனைக்குட்டியா? கன்னுக்குடியா, பன்னிக்குட்டியா, கழுதைக்குட்டியான்னு கண்டுபிடிக்க முடியாத உருவத்துல இருக்கு.

நாய் வளர்க்கிற பேர்ல இவனுங்க அடிக்கிற இம்சை தாங்க முடியல. அந்த நாய்க்கு வாய்ல நுழையாத பேரு வச்சு, அதுகிட்ட கூட இங்க்லீஷ்லயே பேசி பழகுறாய்ங்க. அதுக்கு தனி தட்டு, தனி அரிசி, தனி சமையல், தனி தீனின்னு உடம்பு முடியாதவங்கள பாத்துக்கிற மாதிரி பொத்தி பொத்தி வளர்க்குறாங்க. அது அந்த வீட்ல உள்ள சோம்பேறிகள விட மோசமா வளர்ந்து நிக்குது. வேளாவேளைக்கு டான்'ன்னு மணி அடிச்சா பசி வந்து கத்த ஆரம்பிச்சிடுது. நாய்ன்னா குரைக்கும்ன்னு சொல்வாங்க. இதுக்கு அதெல்லாம் வரதே இல்ல. எல்லாத்துக்கும் ஒரே கத்தல் தான். பசிச்சாலும், வீட்டுக்குள்ள யார் வந்தாலும், கொஞ்சினாலும் ஒரே ரகமான காட்டுக்கத்தலை தவிர ஒன்னும் அதுக்கு தெரியல.

பகல்ல அங்கேயும் இங்கேயும் ஓடி கிட்டு படுத்தே கிடக்கிற நாய், நைட்ல அந்த வீட்ல உள்ளவங்க தூங்குறதுக்கு முன்னாடியே இது தூங்க ஆரம்பிச்சிடுது. மாசத்து ரெண்டு தடவை டாக்டர்கிட்ட காமிக்கிறது, தினமும் காலைல அந்த நாயை வாக்கிங் அழைச்சிட்டு போய், டாய்லெட் பிரச்சனைய முடிச்சுட்டு, குளிப்பாட்டி, துவட்டி விட்டு சர்வண்ட் மாதிரி இந்த புது பணக்கார பார்ட்டிகளின் லூட்டிகளை காண கண் கோடி வேண்டும். அற்பனுக்கு வாழ்ந்த மாதிரி வெளி வேசம் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பில்டப் ஆசாமிகளின் நாகரீக நாய் வளர்ப்பை பற்றி தனி நாவலாகவே எழுதலாம். அவ்ளோ இருக்கு அதுக்குள்ள கதை!

- இரா.ச. இமலாதித்தன்


90ஸ் கிட்ஸ் Vs நாகரீக நாய் வளர்ப்போர்!

90ஸ் கிட்:-

ஏன் சார் நாயையே இப்படி பொத்தி பொத்தி வளர்க்குறீங்களே? உங்க தாய் தகப்பனையெல்லாம் வேற மாதிரி கவனிச்சிருப்பீங்கள்ள சார்?!

நா.நா.வ:-

இல்ல தம்பி. அவங்களுக்கு கிராமத்த விட்டு வர பிடிக்காதுங்கிறதுனால, அந்த குடிசை வீட்லேயே விட்டுட்டு வந்துடுங்கன்னு என் வொஃய்ப் சொன்னாங்க. அதான் சரின்னும் பட்டுச்சு. அங்கேயே ரெண்டு பேரும் கடைசி காலத்த ஓட்டிட்டாங்க தம்பி.

90ஸ் கிட்:

நாய்க்கு ஒன்னுன்னாலே துடிதுடிச்சு போறீங்க. அப்போ, உங்க அம்மா அப்பாவையெல்லாம் அடிக்கடி போய் பார்த்துட்டு, டாக்டர் செக்கப்லாம் பார்த்துருப்பீங்கள்ள சார்?

நா.நா.வ:

நீங்க சொல்ற மாதிரி கவனிச்சிக்கலாம்ன்னு தான் தம்பி பார்த்தேன், ஆனா முடியல. சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேருமே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறப்பதான் தம்பி இறந்தாங்க. கொழுந்தியா பையனுக்கு கல்யாணம், சகலை பொண்ணுக்கு சடங்குன்னு வொஃய்ப் சைடுல உள்ளவங்க ஃபங்ஷனுக்கு போனதுனால ரெண்டு பேரோட டெத்க்கு கூட கடைசி நேரத்துல தான் தம்பி போக முடிஞ்சிச்சு.

90ஸ் கிட்:

அதுனால என்ன சார்! வொஃய்ப், நாய் மேல நீங்க வச்சிருக்க பாசத்துல உங்கள யாருமே அடிச்சிக்க முடியாது; சூப்பர் சார்.

- இரா.ச. இமலாதித்தன்



செல்லப்பிராணி வளர்ப்பு பிரியர்!

வீட்டுக்குள்ள ஹாலில் ஏசியை போட்டுட்டு, அங்கேயே நாயையும் படுக்க வச்சிட்டு, கதவுக்கு வெளியே ஷூ ஸ்டாண்ட் கிட்ட டவுசரோட ஒருத்தர் வாட்ச்மேன் மாதிரி உட்கார்ந்து இருக்காரே அவர்தாங்க செல்லப்பிராணி வளர்ப்பு பிரியர்!

11 செப்டம்பர் 2022

90ஸ் கிட்ஸ்களின் கனிவான கவனத்திற்கு! அத்தியாம்: 1


90ஸ் கிட்ஸ்களின் கனிவான கவனத்திற்கு! அத்தியாம்: 1


கல்யாணத்துக்கு அப்பறம் சுதந்திரம் பறிபோய்டும்.

சுயமா ஒரு சின்ன முடிவு கூட எடுக்க முடியாது.

வெளியூர் இல்ல, வீட்டை விட்டு வெளிய போக கூட ஆயிரத்தெட்டு கண்டிசன்கள் வரும்.

லேட் நைட் வர முடியாது. 7.30 மணியே லேட் நைட் கணக்குல தான் வரும். வரலைலைனா ஏழரை தான்.

லீவு நாளு, திருவிழா நாளுன்னு ஃப்ரெண்ட்ஸ பார்க்க கூட வெளிய போக முடியாது.

ப்ரெண்ட்ஸோட கல்யாணமோ, கோவிலுக்கோ வெளியூர் கிளம்புறதுக்கு ப்ரெண்ட்ஸ் மட்டும் போற மாதிரி ப்ளான் பண்ற தகவல் கிடைச்ச நொடியிலிருந்து வீட்டுக்குள்ள பூகங்கம் கிளம்பும்.

கடைத்தெரு, தியேட்டர், ஹோட்டல்ன்னு அடிக்கடி போய்கிட்டே இருக்கணும். மணிபர்சையும் டயட்லேயே வச்சிக்கணும்.

சோசியல் மீடியாவுல ஒரு போஸ்ட், கமெண்ட் கூட போட முடியாது. எப்ப பார்த்தாலும் மொபைல் தானான்னு சண்டை வரும்.
 
காமெடி வீடியோக்களை கூட சலனமில்லாம சிரிக்காம பார்த்து பழகிக்கணும். சிரிச்சா போச்சு.

நிம்மதியா ஹெட்ஃபோன் போட்டு பாட்டு கூட கேட்க முடியாது. உங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்க, உங்க அப்பா இப்படி சொல்லிட்டாரு, உங்க குடும்பத்துல உள்ளவங்க அதை பண்ணிட்டாங்க, இதை பண்ணிட்டாங்கன்னு சொல்லிச்சொல்லி, நம்ம காதுக்கு ரெஸ்டே இருக்காது.

இவ்ளோ சொல்லியும் ஏன்னு போய் அவங்கள கேட்க மாட்டீங்களா? அவரை பாருங்க, இவரை பாருங்கன்னு உசுப்பேத்தி விட்டு கடைசியா, பொண்டாட்டி பேச்சை கேட்க ஆரம்பிச்சிட்டான்னு ஊர்முழுக்க அவதூறுகளை வாங்க வேண்டி வரும்.

பைத்தியக்காரத்தனமான க்ரிஞ்சிகளையெல்லாம் பார்த்து கேட்டு பழகுறதோட மட்டுமில்லாம, புகழ்ந்து தொலைக்கணும்.

நல்லது கெட்டதுன்னு எதுனாலும் தனியா போக முடியாது. ஜோடியா போனாலும் சிக்கல். ப்ளான் பண்ணின டைமுக்கு சீக்கிரமாவும் போக முடியாது. அங்க யாராவது அவுகள சரியாக கவனிக்கலைன்னா பாதியிலேயே ஒடியார வேண்டிருக்கும்.

மத்த பொண்ணுங்க போட்டிருக்க ஜூவல்ஸ், சாரின்னு அத்தனை மேக்கப்களையும் காட்டிக்காட்டி என்னை என்னைக்காவது இப்படி பண்ணிக்க விட்டுருக்கீங்களான்னு எல்லார் முன்னாடியும் வரும் முனுமுனுப்பையெல்லாம் யாருக்கும் தெரியாம சிரிச்சே சமாளிக்கணும்.

ஒரே நேரத்துல ரெண்டு மூனு பங்ஷன் வந்தா, எந்த பங்க்‌ஷனுக்கு போகணும்னு நாம முடிவு பண்ண முடியாது.
 
காசு இருக்கோ இல்லையோ, லீவு கிடைக்குதோ இல்லையோ பொண்டாட்டியோட தூரத்து சொந்தக்காரர்களின் பங்க்‌ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடியே ட்ரெயினோ, பஸ்ஸோ புக் பண்ணி போய்ட்டு, எதையாவது பெருசா செய்யணும்.

பெத்தவங்கள விட வாக்கப்பட்டவங்க குடும்பத்தை தான் தாங்கி பிடிக்கணும். மத்த குடும்பம் மாதிரி நாங்க இல்ல. எங்க குடும்பம் அப்படி, இப்படி என்கிற பில்டப்களுக்கு ஆமாம் சாமி போடணும்.

பொண்டாட்டி வீட்டு சொந்தக்காரங்க தான் நல்லவங்கன்னு சொல்றது இல்லாம, நம்மளோட சொந்த பந்தமெல்லாம் மோசமானவங்கன்னும் சொல்ல பழகிக்கணும்.

எங்கப்பா தான் சூப்பர்ஹீரோன்னு பில்டப் கதைகளை சொல்ற மனைவிகிட்ட எதிர்கேள்வி கூட கேட்க முடியாது. கேட்டா அதுவே தனி பஞ்சாயத்தா நாலஞ்சு நாள் போகும்.

மனைவியோட சொந்தக்காரங்க தான் நமக்கும் சொந்தக்காரங்க. நம்ம இத்தனை நாளு பழகுன ப்ரெண்ட்ஸ்ல இருந்து சொந்தக்காரன் வரைக்கும் மனைவிக்கு பிடிக்கலைனா குட்பை தான் சொல்லணும்.

                                                                                                   (2ஆம் அத்தியாயம் தொடரும்...)

- இரா.ச. இமலாதித்தன்

09 செப்டம்பர் 2022

காசுக்காக காலை நக்கும் உலகம்!

”ஃப்ரெண்ட் விசயத்துல கணக்கு பார்க்க மாட்டேன். கணக்கு விசயத்துல ப்ரெண்ட்டே பாக்க மாட்டேன்” என சிறுத்தை படத்தில் பாதி மொட்டை அடித்து பணம் பிரிக்கும் காட்சியில் சந்தானத்திடன் கார்த்தி சொல்வாப்ள. அந்த மாதிரி காசு விசயத்தில் அனைவருமே கார்த்தி வகையறா தான்!

இதே கார்த்தி, சிறுத்தை போன்றதொரு திரைப்படத்தில்
மட்டுமில்லாது, தெலுங்கு திரைப்பட விழாவில் கூட “எனக்கு தமிழ் ஆடியன்ஸை விட டெபனட்டா தெலுகு ஆடியன்ஸ தான் பிடிக்கும்!” என பிசினஸிற்காக கூச்சமே படாமல் சொல்வாப்ள. அது போலத்தான் இங்கே பலரும்.
இதில் அப்பா, அம்மா, மாமனார், மாமியார், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மச்சான், சகலை, நாத்தனார், ஓப்பிடியா என எந்த வேறுபாடும் இல்லை. இடத்துக்கு தகுந்தாற்போல எல்லாரும் பணம் காசு வச்சிருக்க ஆளுக்கு தான் பல்லாக்கு தூக்குவாங்க. செருப்படி வாங்குறதுல கூட காசு இருக்கவன் தங்க செருப்பால அடிச்சா, ரெண்டு அடி எக்ஸ்ட்ராவா கேட்டு வாங்கிப்பாங்க.
”என்ன பண்ணி தொலைக்கிறது. காசுக்கு எச்சில் விட்டு, வசதி படைத்தவனின் காலை நக்கும் இந்த சொந்தக்கார நாய்களை நம்ம வீட்ல நடக்குற நல்லது கெட்டதுக்காக சகித்து கொள்றோம்” என மனதிற்குள் புழுங்கி கொள்வர்களே இங்கு அதிகம். ”காசுக்கு பீ திங்கிறதை காரணங்காட்டி நாம் ஒதுங்கி போனாலும், ’சொந்தம் பந்தம்ன்னு யாருமே இல்ல போல’ என ஊருதெருவுல உள்ளவன் நம்மள காறி துப்புவானுங்களே” என்ற பயத்தில் தான் முக்கால்வாசி பேர் இந்த ஈனக்கூட்டத்தை சகித்துக்கொண்டு போகிறார்கள்.

ஒருவன் கஷ்டப்படுகின்ற காலங்களிலோ, சாதாரண நிலையிலோ, அவனிடமிருந்து தூர நின்று கண்டும் காணாமாலும் கடந்து சென்று விட்டு, திடீரென காசு பணம் பதவி புகழென என கஷ்டப்பட்டவன் செட்டிலான காலங்களில் அவனது காலை நக்கி பிழைக்கும் நயவஞ்சகர்களுக்கு பெயர் சொந்தக்காரர்கள்!

- இரா.ச. இமலாதித்தன்

05 செப்டம்பர் 2022

ஆசிரியரெல்லாம் அறவழியினரா?



நூற்றில் பத்து பேர், 'அனைத்து தகுதிகளும் உடைய' ஆசிரியராக இருக்கலாமே தவிர, மற்ற 90% பேர் வியாபாரிகள் தான். வட்டிக்கு கொடுப்பது, மினி ரியல் எஸ்டெட் செய்வது, ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்வது, வீடு கடைகள் கட்டி வாடகை வசூலிப்பது என பகுதி நேர புரோக்கர்கள் இங்கே அதிகம். ஃபேஸ்புக்கில், வாட்சப்பில் யோக்கியர் போல காட்டிக்கொள்ளும் இவர்களில் பெரும்பாலானோர் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை.

கஷ்டப்படும் பெற்ற தாய் தந்தை, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுக்கு கூட பலர் உதவ முன்வருவதில்லை. தன் பூர்வீக ஊருக்கு அருகேயுள்ள புறநகரங்களிலுள்ள உருவாக்கப்பட்ட புதுப்புது நகர்களில் வீடு கட்டி பொண்டாட்டி, பிள்ளை என சுருங்கி விடுகின்றனர். நல்லது கெட்டதற்கு மட்டும் ஊரார், உறவுகளை பார்க்க சில மணிநேரம் ஒதுக்கி, அவர்களோடு தங்கி விட்டு ஒதுங்கி விடுகின்றனர்.

ஆசியர்கள் அனைவருமே சுயநலவாதிகளா? என தெரியாது. ஆனால் பல சுயநலவாதிகள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். தன்னை மிகப்பெரும் ஆளுமையாக காட்டிக்கொள்ள காய் நகர்த்தி, பொதுவெளிகளில், சமூக ஊடகங்களில் எளிமை வேடம் போடுவார்கள். பெரும்பாலான ஆசிரியர்களின் திருமண இணையர்களும் ஆசிரியராகவே இருப்பதால், தன் குடும்பச்சூழலின் பின்னணியை மறைத்து,பழசையெல்லாம் மறந்து தனித்தே பயணிக்க விரும்புகிறார்கள். ஒருகாலத்தில் ஆசிரியர்கள் மீதெல்லாம் அத்தனை மதிப்பை வைத்திருந்தேன். அவர்களில் பெரும்பான்மையோரின் சுயரூபம் புரிந்த பின்னால் எதார்த்தம் உணர்ந்தேன்.

ஆசிரியர்களில் பலர், சிவாஜியை தோற்கடிக்கும் வல்லமை பொருந்திய மாபெரும் நடிகர்கள். கம்பனை மிஞ்சும் கற்பனை வளமிக்க எழுத்தினால் பொய்யை கூட நம்ப வைப்பவர்கள். நல்ல வருவாய் வருகின்ற கிராமத்து கோவிலின் அர்ச்சகர் போல நாசூக்காக பேசும் வல்லவர்கள். எளிதாக சொல்வதெனில், என்னளவில் அவர்களெல்லாம் சைலண்ட் கில்லர்கள்!
மீதமுள்ள, அந்த பத்து சதவீத ஆசிரிய பெருமக்களுக்கு, இனிய ஆசிரியர் திருநாள் நல் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்